Thursday, December 29, 2011

கற்றது வெட்னரி -ஒரு மாட்டு டாக்டரின் மறுபக்கம்


எனக்கும் , எங்க அண்ணனுக்கும் விலங்குகள் மேல  சின்ன வயசுல இருந்தே பிரியம் ஜாஸ்தி
1.நானும் அவனும் சேர்த்து கிட்ட தட்ட 20 நாய்கள் வளர்த்து இருக்கோம் 
( ரோட்ல போற ஒரு குட்டி நாயையும் விட மாட்டோம் )
மேலும் நாங்கள் வளர்த்த மிருகங்களின் பட்டியல் ... 

2 கிளி , நிறைய கோழிகள் ,ஒரு அணில் ,வீடு நிறைய பல்லிவீட்டுக்கு பின்னாடி எறும்பு புத்து,வீட்டு சந்துல கரப்பான் பூச்சி , சாக்கடைல தவள , புதர்ல ஓணான் ...........

2.எங்க அம்மா ஒரு zoology டீச்சர்     
                                 
எனக்கு நல்ல எஞ்சினரிங் காலேஜ்ல நல்ல சீட்டு கிடச்சுது , எங்க அப்பா , அண்ணன் எல்லோரோட எதிர்ப்பையும் மீறி வெட்னரி சேர்த்தேன்.

சோ மேல சொன்ன காரணங்களால ,நம்ம டாக்டர் மிருகங்கள காப்பாத்தனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வெட்னரி சேர்த்து இருக்காருன்னு நீங்க நினைக்கலாம்.

அப்புடி எல்லாம் ஒன்னும் இல்ல,

எனக்கும் கணக்குக்கும் ஆவாது , சோ இன்ஜினியரிங் - வேலைக்காவது மச்சி
எப்புடியாவது ஸ்டெத் மாட்டணும்னு ஆசை , மெடிக்கல் சீட் ஜஸ்ட் மிஸ்ஸு , வேற வழி இல்ல அதுனால சேர்ந்தேன்.

வெ . மு ( வெட்னரிக்கு முன்  ) என்னோட மறுபக்கம் :
நான் வளர்த்த நாய் எங்கயாச்சும் லாக் ஆகி நின்னா , கட்டயாலயே ஒரு போடு போட்டு பிரிச்சு விட்டுருக்கேன்,
கிளிய பேச சொல்லி torture பண்ணி இருக்கேன்,
ஓணானுக்கு பீடி குடிக்க சொல்லி பிள்ளையாருக்கு அது பண்ணுன பாவத்துக்கு ரிவென்ச்  எடுத்துருக்கேன் ,
கரப்பான் பூச்சிய ஓட விட்டு மிதிச்சிருக்கேன்,
தவளைய தாவ விட்டு அடிச்சுருக்கேன்,
எறும்பு புத்துல லட்சுமி வெடிய சொருகி வெடிச்சுருக்கேன்.

வெ. பிவெட்னரிக்கு பின் ):
நான் : தம்பி , ஓணான கல்லை விட்டு அடிக்கப்படாதுடா ராஜா
அவன் : உனக்கு தெரியாது சார் , அது பிள்ளையாருக்கு கொட்டாங்குச்சியில ஒன்னுக்கு அடிச்சு குடுத்துருக்கு , தெரியுமா ?

நான் மனதுக்குள்ளயே   :  ( இதே கதைய எத்தன பேருடா சொல்லுவீங்க , ஹ்ம்ம் அடுத்த வெட்னரியன் உருவாகிட்டான்டா ) என்று எண்ணிய படி இடத்தை காலி செய்தேன்.

     சின்ன வயசுல நான் நல்லா படிச்சு வகுப்புல முதல் மதிப்பெண் எடுப்பேன் , ஆனா எங்க அண்ணன் எனக்கு ஆப்போசிட் , அவன மிரட்ட எங்க அப்பா ," கண்ணா  தம்பிய பாரூ எப்புடி படிக்ரான்னு , அவன் நல்ல வைட் காலர் ஜாபுக்கு போவான் ,நீ   இப்புடியே படிச்சன்னு வச்சுக்கோ அப்புறாம் சாணி அள்ள தான் போகணும் " அப்புடின்னு சொல்வாரு . எங்க அம்மாவோ " ஆணி போய் ஆடி வந்தா அவன் டாப்பா வருவான்னு " சொல்வாங்க.
 ஆனா இப்போ எங்க அண்ணன் ஒரு NRI , நான் சாணி அள்ரேன் ( ஒரு ரைமுக்கு தான் அப்டி சொன்னேன் ,ஆனா  எங்க தொழில்ல சாணி தான் எங்களுக்கு அச்சாணி  ).


சரிவெட்னரி சேரப்போறோம் , நமக்கு வெட்னரியப்பதின knowledge என்ன ?

மாட்டு டாக்டர்னா மாட்டு பின்னாடி கைய விட்டு ஏதோ செய்வாங்க
ஆமா..... மாடு எப்புடி இருக்கும் ?
நாலு காலு, ஒரு வாலு, ரெண்டு கொம்பு
புல்லு குடுத்தா பாலு குடுக்கும் ( அப்டியா ?) , உன்னால முடியாது தம்பி
“மகனே என்ன யோசிச்சுகிட்டு இருக்க ? நாளைக்கு காலேஜ்ல நீ சேரனும் , போய் தூங்கு "' இது எங்க அப்பா .

அடுத்த நாள் காலை .... 
ஆகா அந்த காட்சிய என் வார்த்தைகளால  எப்புடி விவரிப்பேன் ,
தில்லி செங்கோட்டாய போல கம்பீரமா வரவேற்றது என்னோட காலேஜ்…

வாங்க நண்பர்களே எங்க வாழ்கையையும் , என்னோட காலேஜையும் தமாசா சுத்தி காட்டுறேன் ,

 நண்பர்களே எங்களின் டைரியின் பக்கங்கள் உங்களுக்காக .....  

Monday, December 26, 2011

பரிணாமத்துக்கும் பாசத்துக்கும் என்ன சம்பந்தம் ?

 ஏன் ஹிட்லர் அப்புடி மிருகதனமானவனா இருந்தார்?


ஏன் காந்தி , டாக்டர் doolittle (!)  போன்றோர் நல்லவர்களாக இருக்கிறார்கள் ?
(ஒரு வகைல பாத்தா காந்தியும் ஹிட்லரும் பரந்த மனசு கொண்ட பெரியவர்கள் தான் , எப்புடி ? பதில் கடைசியில்)

மயிலு ஏன் டான்ஸ் ஆடுது ? மார்கழி மாசத்துல நாய்கள்  ஏன் அடிச்சுக்குது ? மின்மினி பூச்சிக்கு ஏன் படக்சுல பல்பு எரியுது ?

 ஏன் டாக்டர் நீங்க இப்புடி பதிவு எழுதுறேன்னு உயிரை வாங்குறீங்க ?

 எல்லாத்துக்கும் ஒரே  பதில் ------- மேட்டர்.

இந்த பதில் காமடியா ( காமநெடியா ) இருக்கலாம் , ஆனா அது தான் அப்பட்டமான உண்மை.


................................................................
நீங்க ஒரே கைல  பத்து பேர அடிக்குற அப்பாடக்கரா இருக்கீங்க , ஆனா உங்களால மேட்டர் பண்ண முடியாது , அப்ப என்ன பயன்? , நீங்க செத்த பின்ன உங்க அப்பாடக்கர் ஜீன் இந்த உலகத்த  விட்டே மறைஞ்சிடும் .

சோ பில்டிங்கு ஸ்ட்ராங்கா இருந்தா மட்டும் பத்தாது , பேசுமேன்ட்டும் ஸ்ட்ராங்கா இருக்கணும்.
...................................................................
ஒவ்வொரு உயிரினமும் தனது ஜீன இந்த உலகத்துல நிலை நிறுத்த கடுமையா முயற்சிக்கும் .,
........................................................................................
spider  man  படம் ….

வில்லன்: ஹஹஹா இப்ப நீ figure காப்பாத்த போறியா? இல்ல இந்த உலகத்த காப்பாத்த போறியா ?

இந்த கேள்விய என்கிட்ட கேட்ருந்தா ( உங்க கிட்டயும் தான் ) - பதில் : figure 
எரியிற வீட்ல இருந்து உங்க பையன முதல்ல காப்பாதுவீங்களா ? இல்ல பக்கத்துக்கு வீட்டு பையன காப்பாதுவீங்களா? உங்க பையன தானே ?
ஏன் இப்புடி எல்லாரும் சுயநலமா இருக்கோம் ?

நம்ம ஜீன இந்த உலகத்துல நிலை நிறுத்தான் இந்த ஆட்டம் எல்லாம்.
அப்ப இந்த உலகமே சுயநலம் நிறைஞ்சதா ? இந்த நட்பும் பாசமும் எங்கிருந்து வந்துச்சு ?


..............................................................................
டென்ஷன் ஆவாதீங்க , வாங்க evalution படிக்கலாம்.

முதல்ல நமக்கு நம்ம உயிர் முக்கியம் ,


 எடுத்து காட்டு : புலிகிட்ட இருந்து மான் தப்பிகிறது etc  etc..

அடுத்து  நம்ம  வாரிச  காப்பாத்துதல் ( அவன் கிட்ட தானே நம்ம  ஜீன் இருக்கு).

அடுத்து சொந்தக்காரன்...ஒரு மந்தையில் இருக்கும் மற்ற பெண் யானைகள் குட்டி யானையை காப்பாத்துறது ( சொந்தகாரங்களும் நம்ம ரத்தம் தானே).

ஆப்ரிக்கன் ஆலிவ் பபூன் குரங்கை ஒரு சிறுத்தை தாக்கினால் அதை முன்பின் அறியாத மற்றொரு குரங்கு அதை காப்பாத்தும் ( (எனக்கு ஒன்னுனா நீ வா , உனக்கு ஒன்னுனா நான் வருவேன் பாலிசி ).
இந்த வரிசையில் அடுத்து வரும் உறவுகளை தான் நாம் நட்பு என்று அழைக்கிறோம்

சம்பந்தமே நம்ம கோபியும் இறாலும் நட்பா இருக்குரானுங்கன்னா அதுக்கு அடிப்படை காரணம் அவனுங்களோட survival .

..........................................................................................
அதெல்லாம் ஓகே டாக்டர் , அது எப்புடி காந்தியும் ஹிட்லரும் ஒன்னு ?
காந்தி தனது இந்திய மக்கள் தழைத்து ஓங்க வெள்ளையனை விரட்டினார்,
ஹிட்லர் தனது ஆரிய ஜீன் தழைத்து ஓங்க யூதர்களை போட்டு தள்ளினார். 

ஆனா காந்தி அதுக்கு அஹிம்சைய கைல எடுத்தாரு ( ஏன்னா அவரோட ஆறாம் அறிவு விழிப்பு நிலைல இருந்துச்சு ), ஆனா ஹிட்லர் பயபுள்ளைக்கு மிருகத்தனமான  அஞ்சாம் அறிவு தான் வேலை செஞ்சிருக்கு . இருந்தாலும் ரெண்டு பேருமே தனது இனம் தழைக்கவே
பாடு பட்டிருக்கிறார்கள் ,அந்த விஷயத்தில் ரெண்டு பெரும் ஒண்ணுதானே?
............................................................................................................
அடுத்து தாய் பாசம் , என்னதான் தாய் பாசம் என்பது தன்னோட வாரிசுகள ( தன்னோட ஜீன )  காப்பாத்த இயற்கை கையாண்ட வழி போல தெரிஞ்சாலும், என்ன கேட்டா அது ஒரு விதிவிலக்கான பண்புன்னு தான் சொல்வேன் .ஆனா சயின்ஸ் அதையும் ஒரு evalution பண்பா தான் பாக்குது , (இது என்னோட தனிப்பட்ட கருத்து).
இப்ப நான் சொல்லப்போற கதைய கேட்டு அழுக கூடாது , சரியா…
கீழ இருக்க படத்த பாருங்க , 


இந்த தேளும் சரி , அந்த குரங்கும் சரி என்னதான் எதிரிகள் சூழ்ந்து இருந்தாலும் தன்னோட குழந்தையை எதிரிகள் கையில் பட்டு விடாமல் தன் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் போகும் இடங்களுக்கு எல்லாம் குழந்தையை தாங்கி செல்லும்.

 அழுகையே   வரலயே, …. கொஞ்சம் வெயிடீஸ்..

Amaurobius  terrestris  ன்னு ஒரு சிலந்தி , குழி அமைத்து அதில் முட்டையிடும் , குட்டி சிலந்திகள் தாய் தரும் இரையை சமத்தாக சாப்பிட்டு கொண்டு  இருக்கும் , ஆனால் குளிர்காலத்தில் இரை கிடைப்பது கடினம் , அப்ப குட்டிகள் ? தான் உண்ணாமல் குளிரில் வாடி இருக்கும் சிலந்தி ,குட்டிகள் பசிக்காக தனது  உடலையே கொடுத்து விடும்.

Amphiporus incubator (ribbon worm ) ன்னு ஒரு புழு , இது ஒரு விதமான குழகுழப்பான திரவத்தை தன்னை சுற்றி உருவாக்கி  அதில் முட்டையிடும் , அதில் இருந்து வரும் குட்டி புழுக்கள் தாயை தின்று வளரும்.


...........................................................................
தாய்பாசம் என்ற உணர்ச்சிக்கு கண் கிடையாது ( காதலுக்கு தானே  கண் கிடையாது ? ன்னு குறுக்கு கேள்வி கேக்கப்படாது )

--- கீழ உள்ள படத்த பாருங்க


என்ன இன்னும் அழுகை வரலையா ? அப்ப உங்களுக்கும் அஞ்சாவது அறிவு வரைதான் வேல செய்யிதுன்னு அர்த்தம்.

Related Posts Plugin for WordPress, Blogger...